Tuesday, July 12, 2011

happy news......

Hi friends,Our "Vizumin-Vidiyal" team going to organize 2nd Blood Donation camp at Singalandapuram shortly...

Wednesday, February 23, 2011

save trees


இரண்டு பெரும் நிகழ்வுகள் இன்றைய உலகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. ஒன்று பூமி வெப்பம் அதிகரிப்பது, மற்றொன்று பட்டினிச் சாவுகள். இவை இயற்கைச் சீற்றத்தால் நிகழ்பவைகளா? இதனை அலசுகிறது இக்கட்டுரை.
உலக சுகாதார அமைப்பு 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் மனிதனால் உருவாக்கப்பட்டு வரும் காலநிலை மாற்றம் 2020ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் ஆண்டுதோறும் 3 இலட்சம் பேர் பலியாக காரணமாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது. இந்த கணிப்புக்கு முன்கூட்டியே 2000 மாவது ஆண்டு முதல் காலநிலை மாற்றத்தால் உலகெங்கும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.
வளர்ச்சி அடைந்தவை என்று சொல்லப்படுகிற பணக்கார நாடுகள் இந்த கேடுகளுக்கு காரணமாக இருக்கின்றன. ஆனால், ஏழை நாட்டு மக்கள் இதன் பாதிப்புகளை சந்திக்கின்றனர். குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக மலைவாழ் மக்கள், நதிக்கரை ஓரம் வாழும் மக்கள், கடலோர மக்கள் மற்றும் நிலமற்ற உழைக்கும் மக்கள் என விளிம்புநிலை மக்கள்தான் அதிக அளவில் உயிர் இழந்திருக்கின்றனர்.
பூமியைச் சுற்றி உருவாகும் சரிப்பசை வளையம் உருவாகுவதனால் ஒளி உள்ளே வருகிறது. பூமிக்கு வந்த ஒளி வானத்திற்குத் திரும்புவது தடைபடுகிறது. இதனைப் “பசுமை இல்ல விளைவு’’ என்று அழைக்கின்றார்கள். இதற்கு அடிப்படையாக சூழும் காற்றுக்களை பசுமை இல்லக் காற்றுக்கள் என்கிறார்கள். இத்தகைய காற்றுக்களில் கரி அமிலகாற்றே (கார்பன் டை ஆக்சைடு) முதல் இடத்தைப் பிடிக்கிறது. காற்றும் பங்களிப்பும் கீழே தரப்படுகிறது.
கரி அமிலக் காற்று                                          49%
மீதேன்                                                                   18%
குளோரோ ஃபுளோரோ கார்பன்                 14%
நைட்ரசன் காற்று                                               6%
மற்றவை                                                             13%
கடந்த நூறு ஆண்டுகளில் வான்வெளி வெப்பம் 35% உயர்ந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் சராசரி வெப்பம் 0.740 டிகிரி சென்சியஸ் உயர்ந்துள்ளது. 2100 ஆம் ஆண்டு இரண்டு முதல் மூன்று டிகிரி உயரக்கூடும் என்று கணிக்கிறார்கள். பனி உருகுவதால் நதிகள் கடலுக்கு நீர்க் கொடுப்பது குறையும். கடல்நீர் நிலத்திற்கு உள்ளே புகுவதால் குடிப்பதற்கான நீரின் அளவு குறையும். வெள்ளமும், வறட்சியும் மாறி மாறி வரும். பயிர் வளர்ச்சி நேரம் குறையும். விளைச்சலும் குறையும் என்றெல்லாம் கூறுகிறார்கள். கடலோரங்களில் புயலும், வெள்ளமும் பெருகுவதால் கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்வார்கள். உயிரிழப்பும், பொருளிழப்பும் பெரிய அளவில் நிகழும்.

Tuesday, February 1, 2011

இந்தியாவின் வேளாண்மை

வளமான கங்கை நதி டெல்டா பகுதி - கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் வெப்பமண்டல சூறாவளிக்கு அறியப்பட்டது - சணல், தேயிலை மற்றும் அரிசி பயிர்செய்தலை ஆதரிக்கிறது. இந்தப் பகுதியிலிருந்து மீன் வளர்ப்பும் அதன் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.


இந்தியாவின் வேளாண்மை பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலன நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.


இன்று விளைநில உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வேளாண் மற்றும் அதற்குத் தொடர்புள்ள துறைகளான காடுவளம் மற்றும் மரவேலைகள் போன்றவை 2007 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டுத் தயாரிப்புகளில் 16.6 சதவீதத்தைக் கொண்டிருந்தது, மொத்த வேலைவாய்ப்பில் [1] 60 சதவீதம் விவசாயமே கொண்டும், ஒட்டுமொத்த உள்நாட்டுத் தயாரிப்பில் தன்னுடைய பங்கில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டபோதிலும், இன்றுவரை அதிக பொருளாதாரத்தை ஈட்டும் துறையாக இருந்து இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சியில் ஒரு பெரும்பங்கினை வகிக்கிறது.


பால், முந்திரிக்கொட்டை, தேங்காய், தேயிலை, இஞ்சி, மஞ்சள் மற்றும் கருமிளகு ஆகியவற்றை உலகிலேயே அதிகமாக உற்பத்திசெய்யும் நாடு இந்தியா.[2] உலகிலேயே அதிகமான கால்நடை எண்ணிக்கையையும் (281 மில்லியன்) அது கொண்டிருக்கிறது.[3] கோதுமை, அரிசி, சர்க்கரை, நிலக்கடலை, உள்நாட்டு மீன் ஆகியவற்றில் உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடு.[4] புகையிலை உற்பத்தியில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.[4] உலக அளவிலான பழங்கள் உற்பத்தியில் இந்தியா 10 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது, அதில் வாழை மற்றும் சப்போட்டா உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.[4]


இந்தியாவின் மக்கள் தொகையானது, அரிசி மற்றும் கோதுமை தயாரிப்பிதற்கான ஆற்றலைவிட வேகமாக அதிகரிக்கிறது.[5]